"தி.மு.க-விடம் இருந்து 2 நாளில் அழைப்பு வரும்": செல்வப்பெருந்தகை நம்பிக்கை!
சென்னை: கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக தி.மு.க-விடம் இருந்து இன்னும் இரண்டு நாட்களில் அழைப்பு வரும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது படத்திற்கு செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை
தி.மு.க - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே கனிமொழி எம்.பி., ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். மேல்மட்டத்தில் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்பு வந்ததும் அதிகாரப்பூர்வமாகப் பேச்சுவார்த்தை தொடங்கும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
தேர்தல் வரை பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்காது என்றும், அதன் பிறகு மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் என்றும் அவர் விமர்சித்தார்.
எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சனம்
தி.மு.க-விடம் இருந்து காங்கிரஸ் கைநழுவிப் போய்விடும் என எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். உண்மையில் தமிழ்நாடு தான் அவரிடம் இருந்து கைநழுவப் போகிறது. பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்துள்ள அவரது ஆட்சிக் கனவு ஒருபோதும் பலிக்காது. அந்த கூட்டணி தோல்வியைச் சந்திக்கப் போகிறது என அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது. அதனால்தான் த.வெ.க தலைவர் விஜய்யின் தந்தை சந்திரசேகர் காங்கிரஸிற்கு அழைப்பு விடுத்தார். அதைத்தான் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சுட்டிக்காட்டினார். அதைத் தாண்டி அரசியல் ரீதியாக இதை மிகைப்படுத்த வேண்டாம் என்றும் செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டார்.
Leave a Reply
Cancel Replyதேர்தல் களம்
2026இல் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?
அண்மைச் செய்திகள்
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
முக்கிய பிரிவுகள்
-
பொது செய்தி
427
-
அரசியல்
310
-
தமிழக செய்தி
221
-
விளையாட்டு
209
அண்மைக் கருத்துகள்
-
by Karthik
சிறந்த நடிகர், நடிகைகளுக்கு 1 பவுன்
-
by Seithithalam
Thanks for your great support,
-
by Karthik
Kaipulla is one of the best