"அமைச்சர் ஆக மாட்டேன் என்று நினைத்தேன்.." - மேடையில் கண் கலங்கிய பி.டி.ஆர்!

"அமைச்சர் ஆக மாட்டேன் என்று நினைத்தேன்.." - மேடையில் கண் கலங்கிய பி.டி.ஆர்!

"என் வாழ்க்கையில் எல்லாம் இழந்துவிட்டேன் என்று நினைத்தேன்.." - மதுரையில் தந்தை மற்றும் கலைஞர் குறித்து அமைச்சர் பி.டி.ஆர். உருக்கமான உரை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் பரப்புரையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். அப்போது தனது அரசியல் பயணம், தனது தந்தை பி.டி.ஆர். பழனிவேல் ராஜனின் மறைவு மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தனக்கு அளித்த வாய்ப்புகள் குறித்து மிகவும் உணர்ச்சிகரமான உரையை நிகழ்த்தினார்.

குடும்பப் பாரம்பரியமும் மதுரையும்

தனது உரையின் தொடக்கத்தில், தனது குடும்பத்திற்கும் மதுரைக்குமான பிணைப்பை அவர் நினைவு கூர்ந்தார். "எனது தாத்தா இந்த மதுரையில் வளர்ந்தவர், சேதுபதி பள்ளியில் படித்தவர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும் இந்த மக்களையும் கடந்துதான் அவர் தினமும் சென்றார். எங்களது குடும்பம் ராமநாதபுரம் சமஸ்தானத்துடன் இணைந்து கல்விப் பணிகளில் ஈடுபட்ட பாரம்பரியம் கொண்டது" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தந்தையின் மறைவும் டோக்கியோ பயணமும்

20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சோகமான நிகழ்வை அவர் மேடையில் விவரித்தார். "சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, இதே போன்ற ஒரு தேர்தல் நேரத்தில் எனது தந்தை அமைச்சராகப் பொறுப்பேற்ற ஒரு வாரத்தில் காலமானார். அப்போது நான் டோக்கியோவில் பணியில் இருந்தேன். அந்தத் தகவல் கிடைத்ததும் என் உலகமே இடிந்து விழுந்தது போல் இருந்தது. என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் என்று நினைத்தேன்" எனக் கூறி கண் கலங்கினார்.

கலைஞர் அளித்த வாய்ப்பும் குடும்பச் சூழலும்

தந்தையின் மறைவுக்குப் பிறகு கலைஞர் கருணாநிதி அவர்கள் பி.டி.ஆரை நேரில் அழைத்து, தந்தையின் தொகுதியில் போட்டியிட்டு அமைச்சராகுமாறு கேட்டுக்கொண்டார். "அன்று என் மனைவி கருவுற்றிருந்தார், என் மூத்த மகனுக்கு ஒரு வயதுதான். வெளிநாட்டில் வளர்ந்த அவர்கள் இங்கே வருவதற்கு அச்சப்பட்டனர். குடும்பத்தைக் கைவிட்டு வர முடியாத சூழலில், அமைச்சராகும் மகத்தான வாய்ப்பை என்னால் ஏற்க முடியவில்லை. 'ஐயா, நான் இன்னொரு நாள் வருகிறேன்' என்று கூறிவிட்டு வருத்தத்துடன் கிளம்பினேன். இனி நான் அமைச்சராகவே முடியாது என்றுதான் அப்போது நினைத்தேன்" என அந்த இக்கட்டான சூழலை விளக்கினார்.

மீனாட்சி அம்மன் அருளும் அரசியல் மறுபிரவேசமும்

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மதுரை மீனாட்சி அம்மன் அருளால் அரசியலுக்கு வரும் வாய்ப்பு கிடைத்ததாக அவர் தெரிவித்தார். "2016-ல் மீண்டும் கலைஞர் அவர்கள் எனக்கு வாய்ப்பளித்தார். நீங்கள் என்னை வெற்றி பெறச் செய்தீர்கள். 2016 முதல் 2021 வரை சட்டமன்ற உறுப்பினராகச் சிறந்த முறையில் பணியாற்றினேன். ஐடி அணியை மாநில அளவில் வலுப்படுத்தினேன். 2021-ல் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தயவால், 2006-ல் என்னால் அடைய முடியாத அமைச்சர் பதவியை அடைந்தேன்" என்று தனது அரசியல் வளர்ச்சியைப் பட்டியலிட்டார்.

நிதியமைச்சர் மற்றும் ஐடி அமைச்சர் பணிகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதி அமைச்சராகவும், தற்போது தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் தான் செய்த பணிகளை யாரும் குறை சொல்ல முடியாத அளவிற்கு நேர்மையாகச் செய்துள்ளதாக அவர் கூறினார். குறிப்பாக, ஒன்றிய அரசு மாநில உரிமைகளைப் பறிக்க முயலும் சட்டங்களைத் தொடர்ந்து எதிர்த்து வருவதாகக் குறிப்பிட்டார் 

மக்களுக்கு விடுத்த வேண்டுகோள்

"ஒன்றிய அரசாங்கம் தமிழினத்தின் தனித்துவத்தை அமுக்க நினைக்கிறது. ஜனநாயகமும் சட்டமைப்பும் கேள்விக்குறியாகியுள்ள இந்தச் சூழலில், நமது உரிமைகளைக் காக்க திமுகவின் வெற்றி அவசியம்" என்று கூறி தனது பரப்புரையை நிறைவு செய்தார்.

அமைச்சர் பி.டி.ஆரின் இந்த உருக்கமானப் பேச்சு மதுரை மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தை விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து செய்ய தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

இணைந்திருங்கள்

தேர்தல் களம்

vote-image

2026இல் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?

31%
19%
35%
11%
5%

முக்கிய பிரிவுகள்

அண்மைக் கருத்துகள்

  • user by செல்வா சிவபெருமாள்

    கூட்டுறவு நகை தள்ளுபடி பண்ண வேண்டும்

    quoto
  • user by PRASATH D

    👍

    quoto
  • user by Karthik

    சிறந்த நடிகர், நடிகைகளுக்கு 1 பவுன்

    quoto

Please Accept Cookies for Better Performance