அமெரிக்காவில் 10 லட்சம் இந்தியர்களுக்கு சிக்கல்: டிரம்ப் அரசின் புதிய கிரீன் கார்டு விதி!
வாஷிங்டன்: அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை எனப்படும் 'கிரீன் கார்டு' (Green Card) பெறுவதற்கான விதிகளில் டிரம்ப் நிர்வாகம் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது.
சொந்த நாடு திரும்ப வேண்டும்!
இதுவரை, அமெரிக்காவில் தற்காலிக விசாவில் (எச்-1பி, மாணவர் விசா போன்றவை) தங்கிப் பணிபுரிபவர்கள் அல்லது படிப்பவர்கள், அங்கிருந்தபடியே கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து, தங்களது விசா அந்தஸ்தை மாற்றிக்கொள்ளும் (Adjustment of Status) நடைமுறை இருந்து வந்தது.
அமெரிக்க அரசின் விளக்கம்
இது குறித்துப் பேசிய USCIS செய்தித் தொடர்பாளர் சாக் கஹ்லர் (Zach Kahler), "மாணவர்கள், தற்காலிகப் பணியாளர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகச் குறுகிய காலத்திற்கு மட்டுமே அமெரிக்கா வருகின்றனர்.
இந்தியர்களுக்கு என்ன சிக்கல்?
அமெரிக்காவில் தற்போது 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் கிரீன் கார்டுக்காகக் காத்திருக்கின்றனர். புதிய விதியின்படி இவர்கள் அனைவரும் இந்தியாவிற்குத் திரும்பி வந்து விண்ணப்பிக்க வேண்டும் என்றால், அது நடைமுறையில் சாத்தியமற்ற பல சிக்கல்களை உருவாக்கும். குறிப்பாக:
பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் குடும்பத்தைப் பிரிந்து இருக்க நேரிடும்.
அமெரிக்காவில் உள்ள வேலை பறிபோகும் அபாயம் உள்ளது.
தூதரகங்களில் ஏற்படும் காலதாமதம் காரணமாக அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகும்.
அதே சமயம், அமெரிக்கப் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பவர்கள் மற்றும் தேசிய நலன் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு (National Interest/Economic Benefit) இந்த விதியில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படலாம் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த புதிய குடியேற்றக் கட்டுப்பாடுகள் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.