“நாமாக நாம்” ஒரு உணர்வு கவிதை

“நாமாக நாம்” ஒரு உணர்வு கவிதை

நாமாக நாம் – ஒரு உணர்வு பயணம் ❤️

குறும்பு
செல்லக்கோபம்
பட்டென உடைந்துபோகும் பொறுமை
பொறுமையை சோதிக்கும் ஒப்பனை

நீ சொன்னதும் கேட்கணுமா எனும் திமிர் பார்வை
நான் அப்படித்தான் என அசைத்துப்பார்க்கும் கர்வம்

அதிகாலை கலைத்த அழகு
என்னைவிட உனக்கு வேறென்ன முக்கியம் என்ற பொறாமை

களைத்துப்போகச்செய்யும் அறிவு
அத்தனையுடனும் நீ…


அன்பும் திமிரும் கலந்த உறவு

பிடிவாதம்
மாறா திமிர்
நீ மயங்கும் ஆண்மை

உனக்குப்பிடித்த சீண்டல்கள்
சொன்னதை செய்யும் நேர்மை

சொல்லாததையும் செய்திடும் அன்பு
தலைகோதி தாயாகிடும் நேசம்

அனைத்துமே நீயென்னும் காதல்
அத்தனையுடனும் நான்…


மெல்லிய திரை போல இணையும் இரண்டு மனங்கள்

மெல்லியதிரை
இடை இடையே
விலகியும் விட்டும்
நகர்ந்தும் இணைந்தும் தொடர்கிறது

நாமாக நாம்…
பயணிப்பது நல்லறம் ❤️


காதல் என்பது என்ன?

இந்த கவிதை ஒரு உறவின் பல முகங்களை பேசுகிறது.
குறும்பு, திமிர், அன்பு, பிடிவாதம் – அனைத்தும் சேர்ந்ததே உண்மையான காதல்.

சில நேரங்களில் விலகல் போல தோன்றினாலும், உள்ளுக்குள் இணைந்திருக்கும் இரண்டு மனங்களின் அமைதியான பயணமே இந்த “நாமாக நாம்”.


உணர்வின் ஆழம்

இந்த கவிதை சொல்லும் உண்மை:

  • காதல் என்பது முழுமையான perfection அல்ல
  • அது குறைகளுடனும் அழகாக இருக்க முடியும்
  • புரிதலும், பொறுமையும் அதனை உயிர்ப்பிக்கும்

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

இணைந்திருங்கள்

தேர்தல் களம்

vote-image

2026இல் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?

31%
19%
35%
11%
5%

முக்கிய பிரிவுகள்

அண்மைக் கருத்துகள்

  • user by செல்வா சிவபெருமாள்

    கூட்டுறவு நகை தள்ளுபடி பண்ண வேண்டும்

    quoto
  • user by PRASATH D

    👍

    quoto
  • user by Karthik

    சிறந்த நடிகர், நடிகைகளுக்கு 1 பவுன்

    quoto

Please Accept Cookies for Better Performance