Grok AI விவகாரத்தில் 72 மணி நேர கெடு!

Grok AI விவகாரத்தில் 72 மணி நேர கெடு!

X நிறுவனத்துக்கு (ட்விட்டர்) ஒன்றிய அரசு கடும் கண்டனம்: Grok AI விவகாரத்தில் 72 மணி நேர கெடு!


புதுடெல்லி: சமூக வலைதள ஜாம்பவானான எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான 'X' (முன்னாள் ட்விட்டர்) தளத்திற்கு ஒன்றிய அரசு அதிரடி நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்தத் தளத்தில் உள்ள Grok AI மென்பொருளைப் பயன்படுத்தி ஆபாசமான மற்றும் முறையற்ற படங்கள் உருவாக்கப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் கண்ணியத்திற்கு சவால்

X வலைதளத்தில் Grok எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு செயல்பாட்டில் உள்ளது. சமீபகாலமாக இந்த AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெண்களின் கண்ணியத்தைச் சிதைக்கும் வகையிலும், அவர்களின் தனிவுரிமையைப் பாதிக்கும் வகையிலும் ஆபாசமான மற்றும் சம்மதமற்ற படங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தன. இது பெண்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையுமென ஒன்றிய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய அரசின் அதிரடி உத்தரவு


போலி கணக்குகள் மூலம் இத்தகைய தரம் தாழ்ந்த சித்தரிப்புகள் செய்யப்படுவது X தளத்தின் பாதுகாப்பு கட்டமைப்பில் உள்ள மிகப்பெரிய குறைபாட்டையே காட்டுவதாக அரசு தனது நோட்டீஸில் தெரிவித்துள்ளது.

முக்கிய உத்தரவுகள்:

  • 72 மணி நேர கெடு: இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த 72 மணி நேரத்திற்குள் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

  • மறுஆய்வு: Grok AI-ன் பாதுகாப்பு கட்டமைப்புகளை முழுமையாக மறுஆய்வு செய்து, இதுபோன்ற முறையற்ற பயன்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

  • பாதுகாப்பு நடவடிக்கைகள்: எக்ஸ் தளத்தில் தேவையான AI பாதுகாப்பு வழிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

தேர்தல் களம்

vote-image

காலை நேரத்தில் நீங்கள் முதலில் எந்த தகவலைப் பார்க்கிறீர்கள்?

0%
100%
0%
0%
0%

இணைந்திருங்கள்

அண்மைச் செய்திகள்

முக்கிய பிரிவுகள்

அண்மைக் கருத்துகள்

  • user by Anbu

    Very useful, pls keep on post daily

    quoto
  • user by செல்வா சிவபெருமாள்

    கூட்டுறவு நகை தள்ளுபடி பண்ண வேண்டும்

    quoto
  • user by PRASATH D

    👍

    quoto

Please Accept Cookies for Better Performance